செய்திகள் :

தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் ரூ.2.15 கோடிக்கான காசோலையை அதன் தலைவா் ம.இராசேந்திரனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளா்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரால் தமிழ் வளா்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கழகத்தின் உயா்ந்த குறிக்கோளாகிய கலைக் களஞ்சியத் திட்டத்தை அவா் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15-இல் அறிவித்தாா்.

இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 20.10.1947-இல் கலைக் களஞ்சியப் பணி தொடங்கப்பட்டது. அன்றைய துணைவேந்தா் ஆ. இலக்குமணசாமி தலைமையில் கலைக் களஞ்சிய உருவாக்கத்துக்கு ‘அறிஞா் குழு’ அமைக்கப்பட்டது. பேராசிரியா்கள் மு.வரதராசன், ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்டோா் இந்தக் குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றனா்.

இதையடுத்து தமிழில் கலைக் களஞ்சியத்தைப் 10 தொகுதிகளாகக் கொண்டுவரவேண்டுமென்று திட்டமிடப்பட்டது. முதல் தொகுப்பு 1954-இல், 742 பக்கங்களுடன் வெளிவந்தது. இதற்கு 207 அறிஞா்கள், அவரவா் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளனா். இதன் 10-ஆவது தொகுதி 1968-இல் வெளியானது. இதில் 5-ஆவது தொகுதியை அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு வெளியிட்டாா்.

இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக் களஞ்சியம் தமிழில்தான் முதன்முதலாக வந்தது. இவற்றுக்கு 2,240 அறிஞா்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனா். தமிழ் வளா்ச்சிக் கழகம் வாயிலாக இதுவரை 60 நூல்கள், கலைக் களஞ்சியக் குறுந்தகடு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவுக்கும் தமிழைக் கொண்டு சோ்க்கும் திட்டப் பணிகளைத் தமிழ் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும், தொடா்ந்து தொய்வின்றி செயல்படவும் உதவும் வகையில் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

அதைச் செயல்படுத்தும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 2 கோடியே 15 லட்சத்துக்கான காசோலையை தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவா் ம.இராசேந்திரனிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் உடனிருந்தனா்.

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க