கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
தமிழ்நாடு அரசு: இளைஞர்களுக்கு கிராம உதவியாளர் பணி; 2,299 காலிப்பணியிடங்கள் - யார் விண்ணப்பிக்கலாம்?
வருவாய் கிராமங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
கிராம உதவியாளர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 2,299
வயது வரம்பு: 21 - 32 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.11,100 - 35,100
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு (தேர்ச்சி பெற்றும் இருக்கலாம், தேர்ச்சி பெறாமலும் இருக்கலாம்)

குறிப்பு: விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
தேர்வு தேதி: செப்டம்பர் 5, 2025
விண்ணப்பம்: அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில், இந்தப் பணிக்கான விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 5, 2025
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!