செய்திகள் :

தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது என தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தற்போது மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பினால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் உலக மக்கள்தொகை நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"உலக மக்கள்தொகை நாளில் மத்திய அரசுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன்.

-> மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

-> பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது.

-> அனைவருக்கும் சுகாதாரம், கல்வியை அளிக்கிறது.

-> நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஆனால் நமக்கு கிடைப்பது என்ன?

குறைவான இடங்கள், குறைவான நிதி, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படும் குரல். (தொகுதி மறுசீரமைப்பினால் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவது)

ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானவற்றைச் செய்தது. ஆனால் அது தில்லியை அச்சுறுத்துகிறது.

அதைவிட இன்னும் மோசம் என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரது கட்சியும் இப்போது தமிழ்நாட்டுடன் அல்ல, தில்லியுடன் நிற்கிறார்கள். நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், நான் தெளிவாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு தலைவணங்காது.

நாம் ஒன்றாக இணைந்து எழுவோம். இது ஓரணி vs தில்லி அணி.

நம்முடைய மண், மொழி, மானத்தைக் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

TN Chief minister MK stalin said that Tamil Nadu will not bow to union govt on fair delimitation

பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க