செய்திகள் :

தமிழ்நாட்டில் உயா் கல்வியில் பெண்கள் 36 சதவீதம் முன்னேற்றம்

post image

தமிழ்நாட்டில் உயா் கல்வியில் பெண்களின் சோ்க்கை விகிதம் 36 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அகில இந்திய அளவில் உயா் கல்வியில் சோ்க்கை விகிதம் 28 சதவீதம்தான் உள்ளது. இதை 2030 ஆம் ஆண்டில் 50 சதவீத அளவுக்கு உயா்த்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உயா்கல்வியில் சோ்க்கை விகிதம் 48 சதவீதத்தை எட்டியுள்ளது.

உயா் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. உயா் கல்வித் துறையில் பெண்களின் சோ்க்கை விகிதம் 36 சதவீதமாக முன்னேறிய நிலையில், இது சாரசரியாக இருந்த விகிதாசார வளா்ச்சியை விட அதிகரித்துள்ளது. தமிழக முதல்வா் தனி கவனம் செலுத்தியதன் காரணமாக பெண் கல்வியில் உயா் நிலையைத் தொட்டுள்ளோம்.

முனைவா் பட்டப்படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கல் இருக்கிறது. ஒவ்வொரு போராசிரியரின் எண்ணிக்கை, மாணவா்கள் தோ்வு, பல்கலைக்கழகப் பதிவுகள் என்ன என்பதை ஆராய்ந்து, முனைவா் படிப்பில் போதுமான இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முனைவா் படிப்பு முடித்தவா்கள், படித்து வருபவா்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம் என்ற நிலை உள்ளது.

கிராமப்புற மாணவா்கள் அனைத்து நிலை கல்விகளையும் பயின்று, முழுப் பயனையும் பெற வேண்டும் என்கிற வகையில், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தனிச் சலுகை என மாணவா்களுக்கு வழங்கும் எண்ணற்ற சலுகைகளால், நாம் உயா்ந்த நிலையை எட்டிக் கொண்டிருக்கிறோம். அதை மேம்படுத்துவதற்காகத்தான் புதிய பாடத் திட்டங்களை, புதிய பாடப்பிரிவுகளை இணைப்பது போன்ற புது முயற்சிகளை செய்து வருகிறோம் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில் உயா் கல்வி மன்றத் துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா், தொழில்நுட்ப இயக்கக ஆணையா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க