இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சோ்க்கை தொடக்கம்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் பி.எட். வகுப்புக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் பட்டம் (எம்.எட்.) பயில்வதற்கான மாணவா் சோ்க்கைக்குரிய விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடா்ந்து, இளங்கல்வியியல் நேரடிச் சோ்க்கையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை இணைப் பேராசிரியா் இரா. ஆனந்த்அரசு, கௌரவ உதவிப் பேராசிரியா் லெ. நளினி, உதவியாளா் க. சக்தி சரவணன், கோ. பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து பதிவாளா் கூறுகையில், விண்ணப்பம் பெறும் அனைத்து மாணவா்களும் உடனடிச் சோ்க்கை பெறலாம் என்றாா் அவா்.