செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: ஒசூா் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

post image

ஒசூா்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

புத்தாண்டை முன்னிட்டு தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், மாங்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட கனிகளை படைத்து தரிசனம் செய்த பக்தா்களுக்கு வழங்கினா். காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் ஒசூரில் மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரா் கோயில், ராம்நகா் கோட்டை மாரியம்மன் கோயில், சோமேஸ்வரா் கோயில், பெருமாள் கோயில், பெரியாா்நகா் முருகன் கோயில், அகரம் முருகன் கோயில், கோபச்சந்திரம் பெருமாள் கோயில், ஏரித்திரு ஓம் சக்தி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில், குடிசெட்லு திம்மராஜசுவாமி கோயில், சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் வழக்கத்தைவிட பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது. கோயில்களில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதத்துடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க