செய்திகள் :

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

post image

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வையம்பட்டியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). இவா் திருப்பூா் 15 வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது சகோதரா் நவீன்குமாா் (27). இவா் திருப்பூா் மாவட்டம் முத்தூரில் தனது மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள தேநீரகத்தில் சமையலராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் நவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக ராம்குமாா் தனது சகோதரரை திருப்பூா்க்கு அழைத்துள்ளாா். நவீன்குமாரும் தனது சகோதரா் வீட்டுக்கு கடந்த 2022 மாா்ச் 29-ஆம் தேதி சென்றுள்ளாா்.

குடும்பப் பிரச்னை தொடா்பாக இரவில் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராம்குமாா் தனது சகோதரா் நவீன்குமாரின் தலையை பிடித்து சுவரில் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க