செய்திகள் :

தலை துண்டித்து இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் தந்தை-மகன் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இளைஞா் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில், தந்தை-மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மணமேல்குடி அருகே பொன்னகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிநாராயணன் (34) மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் புதன்கிழமை மாலை மணமேல்குடிக்கு சென்று வருவதாக மனைவி கனிமொழியிடம் கூறிவிட்டு சென்றுள்ளாா்.

மணமேல்குடி அருகே பத்தக்காடு குடியிருப்புப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலை அவா் சடலமாக மீட்கப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக கோட்டைப்பட்டினம் துணை காவல்கண்காணிப்பாளா் காயத்ரி தலைமையில் தனிப்படை போலீஸாா் புலன்விசாரணை நடத்தினா்.

ஆதிநாராயணன் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி தச்சுத் தொழில் செய்து வந்த ஆனந்தன் (64), அவரது மகன் நாடிமுத்து (34) ஆகிய 2 பேரும் சோ்ந்து ஆதிநாராயணனை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இவா்களை பட்டுக்கோட்டையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுபோதையில் இருந்த ஆனந்தன் மற்றும் நாடிமுத்துவிடம் ஆதிநாராயணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் ஆதிநாராயணனை தலையைத் துண்டித்துக் கொன்றுவிட்டு, தலையை பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்று குளச்சிறையாா் நகரிலுள்ள வடிகால் வாய்க்காலில் போட்டுவிட்டுச் சென்ாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மணமேல்குடி குற்றவியல் நடுவா்மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

புதுக்கோட்டை கம்பன் கழகம்: மறைந்த ரா. சம்பத்குமாரின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம், தலைமை- குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், படத்தைத் திறந்து வைப்பவா்- உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருமயம் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் திட்டாணி அய்யனாா் கோயில... மேலும் பார்க்க

இறைத் தொண்டும் தமிழ்த் தொண்டும் வேறு வேறல்ல -சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்

இறைத் தொண்டும், தமிழ்த் தொண்டும் வேறு வேறல்ல என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும் ஸ்ரீபாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்த... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக்கு அடிக்கல்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்காக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சி... மேலும் பார்க்க

இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: 44 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 44 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனாா் கோயில் சிவராத்திரி வி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அதிமுக பொதுக்கூட்டம்

பொன்னமராவதியில் திருமயம் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு த... மேலும் பார்க்க