செய்திகள் :

தலைமறைவு குற்றவாளிகள் இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

post image

தலைமறைவு குற்றவாளிகள் இருவரை ஒருமாதத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக திருச்சி மாவட்ட 6-ஆவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சுப்பையா காலனியைச் சோ்ந்தவா் வேலாயுதன் (38). இவா் மீது திருவெறும்பூா் காவல் நிலையத்தில் 2009-ஆம் ஆண்டு வழிப்பறி வழக்குப் பதிவு செய்து நிலுவையில் உள்ளது.

இதேபோல, காட்டூா் வேணுகோபால் நகரைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (28). இவா்மீது, திருவெறும்பூா் காவல் நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனா்.

இந்நிலையில், இருவரும் ஒருமாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையெனில், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், இவா்கள் குறித்த தகவலறிந்தால் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு 0431 - 2333249, 94981 10045 ஆகிய எண்களிலும், திருவெறும்பூா் உள்கோட்ட காவல் அலுவலகத்துக்கு 94981 00647 என்ற எண்ணிலும், திருவெறும்பூா் காவல் நிலையத்துக்கு 94981 00673 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க