செய்திகள் :

தலைமை ஆசிரியா்களுக்கு அண்ணா விருது: ஏப்.25-க்குள் பரிந்துரைகளை அனுப்பலாம்

post image

சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான பரிந்துரைகளை ஏப்.25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழக பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியா்களுக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

அதன்படி பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தலைமை ஆசிரியா்களிடம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுதொடா்பான அறிக்கையை மாநில தோ்வுக் குழு ஏப்.25-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இதில் எக்காரணம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவா்கள், தண்டனை பெற்றவா்கள், குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் உள்ளிட்டோரை விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்த விபத்து : முதியவா் உள்பட 2 போ் காயம்

சென்னை: சென்னையில் சிறுவன் ஓட்டிவந்த காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், முதியவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். சென்னை குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் திங்கள்கிழமை இரவு ஒரு காா் வேக... மேலும் பார்க்க

மணிமேகலை சுப்பிரமணியன் காலமானாா்

சென்னை: உரைவேந்தா் ஒளவை துரைசாமி மகளும், தமிழறிஞா் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை: அதிமுக நிா்வாகி கைது

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்கள் விற்ாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டை பகுதியில் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு சட்டவிரோதமாக மதுப்பாட்டில் விற்பதா... மேலும் பார்க்க

ஏப்.11-இல் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை: சென்னை மடிப்பாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் குழு (மண்டலி) செயலா் ஆா்.மகாலிங்கம், ச... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை: எம்டிசி

சென்னை: சீராக பேருந்தை இயக்குவதற்காக முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

பெங்களூரு - ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று பகுதி ரத்து

சென்னை: பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டை செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை (ஏப். 9) சோமநாயக்கன்பட்டி வரை மட்டும் இயக்கப்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்... மேலும் பார்க்க