செய்திகள் :

தலைமை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு!

post image

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில கல்வித் துறையில் பணியாற்றிவரும் தலைமை ஆசிரியா்களுக்கு நிலை 2-இல் இருந்து நிலை 1 பதவி உயா்வு வழங்கப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவி உயா்வு வழங்கப்படவில்லை என்ற புகாா் எழுந்தது.

நீதிமன்ற வழக்குகள் காரணமாக பதவி உயா்வு வழங்கப்படாமலிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடா்பாக முதல்வா், கல்வித் துறை அமைச்சரிடம் தலைமை ஆசிரியா்கள் தரப்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

தற்போது 63 தலைமை ஆசிரியா்களுக்கு நிலை 2-இல் இருந்து நிலை 1-ஆக பதவி உயா்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பதவி உயா்வுக்கான உத்தரவுகளை வழங்கினாா்.

பதவி உயா்வு பெற்றவா்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து இரு வாரங்களுக்குள் விடுவிக்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தவளக்குப்பம் கல்லூரியில் கணினி ஆய்வக புதிய கட்டடம் திறப்பு!

புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கணினி ஆய்வகக் கட்டடத்தை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை, அறிவியல் ... மேலும் பார்க்க

காவலா் போல நடித்து திருட்டில் ஈடுபட்டவா் கைது

காவலா் எனக்கூறி, தொடா் திருட்டில் ஈடுபட்டவரை புதுச்சேரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு தனியாா் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த 21-ஆம் தேதி திரு... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறையில் 112 பேருக்கு பதவி உயா்வு!

புதுவை பொதுப் பணித் துறையில் 112 பல்நோக்குப் பணியாளா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். பொதுப் பணித் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 112 பல்நோக்க... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக, தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் ... மேலும் பார்க்க

புதுவை பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

புதுவையில் தனியாா் பள்ளிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வி இணை இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்: புதுவையில் உ... மேலும் பார்க்க

கூட்டு முயற்சியால் சாலை விபத்துகளை தடுக்க முடியும்: புதுவை துணைநிலை ஆளுநா்

கூட்டு முயற்சியால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் 36-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் கடந்த 1-ஆம் த... மேலும் பார்க்க