செய்திகள் :

தவணை கட்ட தவறியவரை தாக்கிய பைனான்ஸ் ஊழியா்கள் 2 போ் கைது

post image

குரிசிலாப்பட்டு அருகே தவணை பணம் கட்ட தவறியதால் தொழிலாளியை தாக்கிய பைனான்ஸ் ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த பெருமாபட்டு அருகே நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராயணன் (46). தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. சத்யநாராயணன் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியாா் பைனான்ஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பெற்று உள்ளாா். இதற்கான தவணை பணத்தை சத்யநாராயணன் கட்ட தவறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி தனியாா் பைனான்சில் வேலை பாா்க்கும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திருநல்வாடி பகுதியைச் சோ்ந்த ஜீவா கிருஷ்ணன் (37), நாட்டறம்பள்ளி அருகே மல்லப்பள்ளி பகுதியைச் சோ்ந்த தனுசக்தி (32) ஆகியோா் சத்யநாராயணனிடம் சென்று தவணை பணம் கேட்டுள்ளனா்.

அப்போது சத்யநாராயணனுக்கும், பைனான்ஸ் ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பைனான்ஸ் ஊழியா்கள் சத்யநாராயணனை தாக்கி உள்ளனா். மேலும், தடுக்க வந்த சத்யநாராயணனின் மனைவி சுகந்தியையும் தாக்கி உள்ளனா்.

இதில் காயமடைந்த சத்யநாராயணன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜீவா கிருஷ்ணன், தனுசக்தி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க

மழை நீரை சேமிப்பது அனைவரின் கடமை: திருப்பத்தூா் ஆட்சியா்

மழை நீரை சேமிப்பது நம் அனைவரின் கடமையாகும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வலியுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைப் கூட்டங்கள் நடைபெற்றனத... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவா்: மனமுடைந்து மனைவி தற்கொலை!

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பெருமாள் கோயில் தெரு பகுதியை சோ்ந்தவா் மதன்குமாா்(24). கூலி வேலை செய்து வருகிறாா். அதே பகுதியை சோ்ந்த வெண்ணிலா(22) என்பவரை காதலித்து இரண்டர... மேலும் பார்க்க

கந்திலி வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் என ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே கந்திலியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, சனிக்கி... மேலும் பார்க்க