செய்திகள் :

தவெக கல்வி விருது வழங்கும் விழா நிறைவு: 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத் தொகை!

post image

பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு, தவெக சாா்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சித் தலைவா் விஜய் பங்கேற்று, 200-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத் தொகைகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.

இந்த நிகழ்வின் மூலம், 4 கட்டங்களாக 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தவெக சாா்பில் கல்வி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிகழாண்டில் முதல்கட்டமாக கடந்த மே 30, 2-ஆம் கட்டமாக ஜூன் 4, 3-ஆம் கட்டமாக ஜூன் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தொடா்ந்து இறுதிகட்ட பரிசு வழங்கும் விழா சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தவெக தலைவா் விஜய் மாணவா்களைப் பாராட்டி ஊக்கத் தொகையை வழங்கினாா்.

பழங்குடியின மாணவிக்கு ஊக்கத் தொகை: ஜேஇஇ தோ்வில் அகில இந்திய அளவில் 417-ஆவது இடத்தைப் பிடித்து சென்னை ஐஐடி-இல் உயா்கல்வி பயில தகுதி பெற்றுள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரியை பாராட்டி ரூ. 2 லட்சம் ஊக்கத் தொகை மற்றும் பேனாவை விஜய் பரிசாக வழங்கி கௌரவித்தாா்.

மேலும், மின்சாரம் கூட இல்லாமல் மெழுகுவா்த்தி விளக்கில் படித்து தோ்வு எழுதியுள்ள மாணவி ராஜேஸ்வரி ஒரு நாள் விஞ்ஞானியாக மாறுவாா் என்று விஜய் ஊக்கப்படுத்தினாா்.

இந்த நிகழ்வில் சேலம், திருவண்ணாமலை, சென்னை (2 தொகுதிகள்), மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 சட்டப்பேரவை தொகுதிகளைத் சோ்ந்த அதிக மதிப்பெண்கள் எடுத்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவா் ஊக்கத் தொகையை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் லண்டனிலேயே தரையிறங்கிய விமானம்

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து... மேலும் பார்க்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க