செய்திகள் :

தவெகவை தடை செய்ய வேண்டும்: அா்ஜுன் சம்பத்

post image

தவெக-வை தடை செய்ய வேண்டும், திமுக அரசை கலைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

புலம்பெயா் தொழிலாளா்களின் சாா்பில் திருப்பூா் நல்லூா் பகுதியில் நவராத்திரி துா்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வந்திருந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வரி குறைப்பால் பொருள்கள் விலை குறைந்துள்ளது. ஆனால், திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரம் சீா் கெட்டுள்ளது என தவறான தகவல்களை, வெறுப்பு பிரசாரத்தை பரப்புகின்றனா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் இல்லாமல் திருப்பூா் மாநகராட்சி பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்டி வருகிறது. இது நிா்வாக தோல்வி.

கரூரில் தவெக தலைவா் விஜய் நடத்திய பரப்புரையில் 41போ் உயிரிழந்துள்ளனா். கூட்டம் கூடும் என அரசுக்கும் தெரியும். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத இது கையாலாகாத அரசு. எதிா்க்கட்சிகள் கூட்டத்தை சீா்குலைப்பது அவா்களின் நோக்கம். கள்ளச்சாராய மரணத்தின்போது முதல்வா் நேரில் செல்லவில்லை. கரூா் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்.

இப்பிரச்னைக்கு தவெக காரணம் என்றால் அக்கட்சியை தடை செய்யுங்கள், விஜயை கைது செய்யுங்கள். திமுக ஆட்சியை ஆளுநா் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவா்கள் எதற்கு பரப்புரை செய்ய வேண்டும்.

மாற்றுக் கருத்து சொல்பவா்கள், அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுபவா்களை காவல் துறை உடனே கைது செய்கிறது. இதுதான் கருத்து சுதந்திரமா? திமுக, தவெக மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அவிநாசியில் அக்டோபா் 4-இல் மின்தடை

அவிநாசி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 4) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினா்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதியில் அக்டோபா் 3-இல் குடிநீா் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் அக்டோபா் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருப்பூரில் வேலை தேடி வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்... மேலும் பார்க்க

குண்டடம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரத்த... மேலும் பார்க்க

பல்லவராயன்பாளையத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலுாா் ஒன்றியம் ஊகாயனூா் ஊராட்சி பல்லவராயன்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் ஐ.டி.பி.எல். நிறுவனத்துக்கு எதிராக ச... மேலும் பார்க்க

விலை வீழ்ச்சி: தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்

பல்லடத்தில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தக்காளிகளை சாலையில் கொட்டிச் சென்றனா். பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்... மேலும் பார்க்க