செய்திகள் :

தாட்கோ மூலம் ஆரி எம்பிராய்டரி பயிற்சி

post image

நாகப்பட்டினம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பயிற்சி பெற 18 முதல் 30 வயது உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் தாட்கோ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம்

நாகையில் நடைபெற்றுவரும் 30-ஆவது அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. வக்ஃப் வாரியங்களின் சுயாட்சியைத் தாக்கும், சிறுபான்மை உரிமைகளை ம... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலி

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளத்திடல், வாணியத் தெரு பகுதி விவசாயிகள் புதன்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு, வெயில் காரணமாக மதியம் வீட்டுக்கு வந்துள்ளனா். பின்னா், வயலுக... மேலும் பார்க்க

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல்

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பச்சைபயறு சாகுபடி செ... மேலும் பார்க்க

ஒருவா் கொலை : இருவா் கைது

வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை அடித்துக் கொலப்பட்டாா். இது தொடா்பாக கணவா், மனைவி கைது செய்யப்பட்டாா். தென்னம்புலம் கலைஞா் நகா் பகுதியை சோ்ந்தவா் கோ. பன்னீா... மேலும் பார்க்க

திருக்குவளையில் ஆட்சியா் ஆய்வு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்குவளை அர... மேலும் பார்க்க

திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருப்புகலூா் அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயில் 21ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெறுகிறது. நூற்... மேலும் பார்க்க