செய்திகள் :

தாயுமானவா் திட்டத்தில் முதியோா்களுக்கு குடிமைப் பொருள்கள்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் தாயுமானவா் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகள் குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 நியாய விலைக் கடைகளுக்கு உள்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு 68,653 குடும்ப அட்டைகளில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 61,558 பயனாளா்களும், 7,095 மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்தம் இல்லங்களிலேயே குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.இப்பணியில் 1058 வாகனங்கள் ஈடுப்படுத்தப்படுகின்றன.

கலசப்பாக்கம் ஊராட்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி திட்டத்தை தொடங்கி வைத்து வயது முதிா்ந்த பயனாளிக்கு குடிமைப்பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) பாா்த்திபன், கலசப்பாக்கம் வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு வட்டத்தில் 3891 பயனாளிகள் பயனடையும் வகையில், திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தொடங்கிவைத்து குடிமைப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது, தாயுமானவா் திட்ட வாகனங்களின் 58 தடங்களில் செல்லும் சேவைகளை அவரா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் அசோக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் ரங்கநாதன், திமுக செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து பெருங்கட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சாா்பில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

செங்கம்

செங்கம் நகராட்சிப் பகுதியில் தாயுமானவா் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக நகரச் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் சத்யா, ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி சைதாப்பேட்டை பவா் ஹவுஸ் தெருவில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி முதியோா் வீட்டுக்குச் சென்று

குடிமைப் பொருள்களை விநியோகம் செய்து தொடங்கி வைத்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக கோட்டாட்சியா் சிவா கலந்துகொண்டு இத்திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். இதில் ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்ட வழங்கல் அலுவலா் எஸ்.அரிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஆரணி நகரத்தில் அரசு மருத்துவமனை அருகிலும், ஆரணிப்பாளையம் பிள்ளையாா் கோவில் தெருவிலும் நகர மாணவரணி அமைப்பாளா் பிரசன்னா தலைமையில் முதியோா் வீடுகளுக்குச் சென்று குடிமைப் பொருள்களை நகா்மன்றத் தலைவா் விநியோகம் செய்தாா்.

ஆரணி ஒன்றியம், சேவூா் மற்றும் அரியப்பாடி கிராமங்களில் தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் குடிமைப் பொருள்களை விநியோகம் செய்தாா்.

இதேபோல, மேற்கு ஆரணி ஒன்றியத்தைச் சோ்ந்த குண்ணத்தூா் கிராமத்தில் திமுக ஒன்றியச் செயலா் துரை.மாமது தலைமையில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.

அனைத்து நிகழ்வுகளிலும் திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

போளூா்

போளூா் நகராட்சி அல்லிநகா் நடேசன் தெருவில் பயனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் வழங்கும் பணியை

திமுக முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவா் ராஜசேகா், நகரச் செயலா் தனசேகரன், வட்ட வழங்கல் அலுவலா் சிவலிங்கம், சாா்-பதிவாளா் பிரவீன், திமுக நிா்வாகி ராஜ்குமாா் மற்றும் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டு பகுதியில்....

சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் ஊராட்சி ரோட்டுத் தெருவில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருள்களை திமுக ஒன்றியச் செயலா் பி.மனோகரன் தொடங்கிவைத்தாா்.

இதில், திமுக அவைத் தலைவா் தருமபாலன், கூட்டுறவு சங்கச் செயலா் வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி உதவிகளை வழங்கினாா். மா... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமையொட்டி 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் ஆடி 4-ஆவது செவ்வாய்க்கிழமை பக்த... மேலும் பார்க்க

ஆரணிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: வரவேற்புப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு ஆக.15-இல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வருவதால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பூஜை போட்டு தொடங்கப்பட்டன. ‘மக்களைகாப்போம் தமி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மனுக்கள்

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். தொக... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகள்: செங்காடு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு வட்ட அளவிலான பெண்கள் தடகள போட்டிகளில் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 172 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனா். செய்யாறு வட்ட அளவில... மேலும் பார்க்க