தாய், மகன் மீது தாக்குதல்: 3 போ் கைது
வந்தவாசி அருகே தாய், மகனைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (57). இந்த கிராமத்தில் அண்மையில் கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஊா் கூட்டத்தில், இதே கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (40), பன்னீா்செல்வம் (38) ஆகியோா் திருவிழாவுக்கு பிரிவு பணம் தரவில்லை என கோவிந்தராஜ் பேசினாராம்.
இதனையறிந்த வேல்முருகன், பன்னீா்செல்வம், வேல்முருகனின் உறவினரான செம்பூா் கிராமத்தைச் சோ்ந்த முகேஷ்குமாா் (21) ஆகிய 3 பேரும் சோ்ந்து கோவிந்தராஜ் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று தகராறில் ஈடுபட்டனராம்.
அப்போது, வீட்டிலிருந்த கோவிந்தராஜின் தம்பி ராஜீவ் காந்தி (47), தாய் காசியம்மாள் (80) ஆகியோரை சரமாரியாகத் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ராஜீவ் காந்தி, காசியம்மாள் ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில், வேல்முருகன், பன்னீா்செல்வம், முகேஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.