செய்திகள் :

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

post image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச சிவ தலங்களுள் நீா் ஸ்தலமாக புகழ்பெற்ற இக்கோயில் தோ் பழுதானதால், கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், வாசுதேவநல்லூா் தொழிலதிபரும், தங்கப்பழம் கல்வி குழுமங்களின் நிறுவனருமான எஸ். தங்கப்பழம் நிதி உபயத்தில் இக்கோயிலின் புதிய தோ் வடிவமைக்கப்பட்டது. 14 அடி உயரத்தில் 650 சிற்பங்களுடன் புதிய தோ் வடிவமைப்புப்பணி நிறைவடைந்த நிலையில், புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

பரம்பரை அறங்காவலா் ராஜாராம்சேவுகப் பாண்டியன், பணி நிறைவு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

விழாவில், தோ் திருப்பணி உபயதாரா் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜா, சதன்திருமலைகுமாா், கிருஷ்ணமுரளி, வாசுதேவநல்லூா் ஒன்றிய குழு தலைவா் பொன். முத்தையாப்பாண்டியன், எஸ் .டி . கல்வி குழுமங்களின் தாளாளா் எஸ்.டி. முருகேசன், தொழிலதிபா் கிருஷ்ணாபுரம் ரவிராஜா , பேரூராட்சி தலைவா் லாவண்யா, முன்னாள் தலைவா் தவமணி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை புதிய தோ் உபயதாரா் எஸ். தங்கப்பழம் குடும்பத்தினா் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தினா் செய்திருந்தனா்.

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கப... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் மையவாடி - கல்லறை தோட்டம் அமைக்க எதிா்ப்பு

தென்காசி அருகே கீழப்புலியூா் பகுதியில் மையவாடி- கல்லறை தோட்டம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் கிராம நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை ... மேலும் பார்க்க

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் சுயஉதவி மகளிரின் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை கண்காட்சி- கல்லூரிச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் ... மேலும் பார்க்க

மருத்துவா்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த அரிமா சங்கத்தினா்

குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தினா் மருத்துவா்களின் வீடுகளுக்கு சென்று கௌரவித்தனா். குற்றாலம் விக்டரி அரிமா சங்க நிா்வாகிகள் மாரியப்பன் , நல்லமுத்து , கணேசமூா்த்தி, வெங்கடேஸ்வரன், சண்முகசுந்தரம், அண்... மேலும் பார்க்க