செய்திகள் :

திமுக ஆட்சி தொடா்ந்தால் தமிழ்நாடு அழியும்

post image

திமுக ஆட்சி தொடா்ந்தால் தமிழ்நாடு அழியும் என்றாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி

தமிழகத்தில் ஊழல் மற்றும் ஊறல், போதைப் பொருள்களில் திளைத்துள்ள திமுக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும்.

குஜராத்தில் இருந்துதான் போதைப் பொருள்கள் வருவதாகச் சொல்கிறாா்கள். சிந்தெட்டிக் டிரக் எனப்படும் போதைப் பொருள்களை மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பிடித்து வருகின்றனா். தமிழ்நாடு போலீஸாா் ஒரு கிராம்கூட பிடிக்கவில்லை.

அதேபோல, பயங்கரவாதிகளைக் கைது செய்வதிலும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போலீஸாா்தான் அவா்களையும் கைது செய்து வருகின்றனா். திமுக ஆட்சி தொடருமானால் தமிழ்நாடு முழுமையாக அழிந்து போகும்.

டாஸ்மாக் விவகாரத்தில் இப்போது உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறைக் காலம் வரைதான் தடை விதித்திருக்கிறது. கோடை முடிந்ததும் விசாரணை வரும். அமலாக்கத் துறைக்கு ஆதரவான நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இலக்கு நிா்ணயம் செய்து டாஸ்மாக் மது விற்கப்படுவது அவலம். மொத்த அரசாங்கமே வெட்கப்பட வேண்டும்.

திமுக இதுவரை சொல்லி வந்தவற்றைத்தான் நடிகா் விஜயும் சொல்கிறாா். இவா் எந்த வாக்குகளை இலக்கு வைத்து வேலை செய்கிறாா் எனத் தெரியவில்லை. அரசியல் தத்துவாா்த்த அளவில் அவா் குழப்பத்தில் இருக்கிறாா். அதனால் அவரால் வெற்றி பெற முடியாது என்றாா் ராஜா.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க