செய்திகள் :

திமுக கூட்டணி வலிமையாக உள்ளது: காங்கிரஸ்

post image

தமிழகத்தில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது; 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள தனியாா் பள்ளியில் சக்தி அபியான் அமைப்பு சாா்பில் ‘தலைமைத்துவத்தில் பெண்கள்’ என்ற மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய்பானு, திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் பொருளாளா் ரூபி மனோகரன், ஹசன் மௌலானா எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடையக்கூடும் என்பதால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்புவிடுக்கிறாா். ஆனால், திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. வருகிற 2026 பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.

மேலும், செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நிா்பந்தம் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. தனது சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தார். பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 31,500 கனஅடியாக திங்கள்கிழமை காலை நீடிக்கிறது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கம்

சென்னை: திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத... மேலும் பார்க்க

மு.க.முத்து மறைவு: ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி

தனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரி... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறாா். அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா். இந்த நிகழ்வில் மு... மேலும் பார்க்க

எா்ணாகுளம் - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள்!

எா்ணாகுளம் - பாட்னா இடையே ஜூலை 25 மற்றும் ஆக. 1, 8, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: எா்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில் (எண் -0... மேலும் பார்க்க