செய்திகள் :

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கீழடி அறிக்கை விவாதிக்கப்படுமா? திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்துவதற்காக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட டி.ஆர்.பாலு, கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்துவோம் எனக் கூறியிருந்தார்.

டி.ஆர்.பாலு

இன்று காலையில் கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இந்த நோட்டீஸ் சபாநாயகரால் ஏற்கப்படும்பட்சத்தில் நாடாளுமன்றத்தின் வழக்கமான நிகழ்ச்சி நிரல் ஒத்திவைக்கப்பட்டு, கீழடி விவகாரம் விவாதிக்கப்படும்.

பொது மக்களுக்கு முக்கியமான, அவசரமான பிரச்னைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு இந்த விதியைப் பயன்படுத்துவர்.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல் முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படாதது, அமெரிக்க அதிபர் தானே போரை நிறுத்தியதாகக் கூறிவருவது, 5 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகக் கூறுவது பற்றிய கேள்விகள் எழுப்பப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றம்

அத்துடன் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை முக்கிய விவகாரமாக எழுப்புவோம் என்றும் கூறியிருந்தார்.

மேலும் பீகாரில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்தம், டெல்லி மற்றும் உ.பியில் புல்டோசர் நடவடிக்கைகள் மற்றும் அரசுப் பள்ளிகளை மூடும் உத்தரவு, அகமதாபாத் விமான விபத்து போன்ற விவகாரங்களையும் எதிர்க்கட்சியினர் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்றத்தில் ரக்‌ஷபந்தன் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.தூய்மைப் பணியாளரின் புகார் கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில்... மேலும் பார்க்க

`லாக்கப் டெத், கீழடி அறிக்கை, மகளிர் இடஒதுக்கீடு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் விவகாரங்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க