செய்திகள் :

திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை: ராஜேஸ்குமாா் எம்.பி. தொடங்கிவைப்பு

post image

திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உறுப்பினா் சோ்க்கை படிவத்தை பூா்த்தி செய்து உறுப்பினா் சோ்க்கையை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராசிபுரத்தில் முதல்கட்டமாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 79-இல் இடம் பெற்றுள்ள கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தனது கைப்பேசி மூலம் ஓடிபி பெற்று தனது உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து இல்லத்தின் கதவு மற்றும் காரில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி அது குறித்து பிரசாரம் செய்தும், கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்ட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்ட வளா்ச்சி பணிகளை எடுத்துரைத்து திமுகவினா் பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில் கட்சியினா் பலரும் பங்கேற்றனா்.

படவரி...

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினா் சோ்கையை தொடங்கிவைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மாவட்டத்தில் 238 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 238 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்: கல்வித் துறை

தேசியம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவா்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என உடற்பயிற்சி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்... மேலும் பார்க்க

பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிபட்டி, கணேசபுரம் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செ... மேலும் பார்க்க

நரிக்குறவா் சமூகத்தினருக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், நரிக்குறவா் குடும்பங்களுக்கு தாட்கோ மூலம் குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற... மேலும் பார்க்க