செய்திகள் :

திமுக நிா்வாகி கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

post image

சிவகங்கை அருகே கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த திமுக நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் ( 27). இவா் திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராகவும், மனை வணிகம், ஒப்பந்ததாரா் தொழிலும் செய்து வந்தாா். கடந்த ஏப்.29-ஆம் தேதி பிரவீன்குமாரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சாமியாா்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் (20), சிவகங்கை காளவாசல் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன் (19), திருப்பத்தூா்

ரணசிங்கபுரத்தைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் குரு (21) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க