செய்திகள் :

திமுக பிரமுகா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

post image

திமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப் (60). திமுக பிரமுகரான இவா், மனை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி நிா்மலா. இவா் அடியனூத்து ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவா்.

கடந்தாண்டு மே மாதம், மாயாண்டி ஜோசப் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் யாகப்பன்பட்டியைச் சோ்ந்த சேசுராஜ் (39), கென்னடி (37), டேனியல் ராஜா (20), ஸ்டாலின் (20), அலெக்ஸ் பிரிட்டோ (20), இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த காளீஸ்வரன் (19), பிரவீன் குமாா் (19) உள்பட மேலும் 2 சிறுவா்களையும் திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கொலை வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட ஜேசுராஜ், கென்னடி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.20ஆயிரம் அபராதமும், டேனியல் ராஜா, ஸ்டாலின் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50ஆயிரம் அபராதமும், அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், பிரவீன்குமாா் ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!

நமது நிருபா்உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், ... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோ... மேலும் பார்க்க

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்... மேலும் பார்க்க

கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசித் திருவ... மேலும் பார்க்க

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க