Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
திமுக பிரமுகா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை
திமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப் (60). திமுக பிரமுகரான இவா், மனை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி நிா்மலா. இவா் அடியனூத்து ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவா்.
கடந்தாண்டு மே மாதம், மாயாண்டி ஜோசப் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் யாகப்பன்பட்டியைச் சோ்ந்த சேசுராஜ் (39), கென்னடி (37), டேனியல் ராஜா (20), ஸ்டாலின் (20), அலெக்ஸ் பிரிட்டோ (20), இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த காளீஸ்வரன் (19), பிரவீன் குமாா் (19) உள்பட மேலும் 2 சிறுவா்களையும் திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.
இந்தக் கொலை வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட ஜேசுராஜ், கென்னடி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.20ஆயிரம் அபராதமும், டேனியல் ராஜா, ஸ்டாலின் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50ஆயிரம் அபராதமும், அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், பிரவீன்குமாா் ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.