செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் 53 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

post image

பிரயக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 53 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா, உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகின்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி உள்ளிட்ட முக்கிய ஆறு நாள்களில் திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். இந்த நிலையில் கும்பமேளா நிறைவடைய 9 நாள்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதுவரை சுமார் 53 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் முதன் முறையாக நாட்டின் நம்பிக்கைக்கு மரியாதை கிடைத்துள்ளது. 500 ஆண்டுக்கால காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி. 2016-17ஆம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக அரசு இல்லாதபோது, அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2.35 லட்சமாக இருந்தது ஆனால், 2024ல் இந்த எண்ணிக்கை 14 முதல் 15 கோடிக்கு உயர்ந்துள்ளது

36வது நாளை தொடர்ந்தும் இன்றும் திரிவேணி சங்கமத்தில் நீராடப் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். பிராயக்ராஜ் ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிவதால் அதிகப்படியான கூட்டத்தை நிர்வகிக்க காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் ஜெனரல் ஜி.பி. சிங், பிரயாகராஜின் மகாகும்பமேளாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார், உத்தரப் பிரதேச காவல்துறை, சி.ஆர்.பி.எஃப் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பதை அவர் பாராட்டினார்.

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், மகாகும்பமேளாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மகாகும்பமேளா சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், சனிக்கிழமை புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பிரயாக்ராஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்குவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க