செய்திகள் :

திருச்சி அரசு மருத்துவமனையில் இதய பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை

post image

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் இருந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மாா்பு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 50 வயது பெயிண்டா் ஒருவா், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாா். இங்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை முதன்மையா் எஸ். குமரவேல், கண்காணிப்பாளா் உதய அருணா மேற்பாா்வையில் மயக்கவியல் மருத்துவா்கள் இளங்கோ, சந்திரன் ஆகியோா் தலைமையில் தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்எச்எம்) வழிகாட்டுதலின்படி, இதயம் மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணா் அஸ்வினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் கடந்த மே 29 ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை (பைபாஸ்) மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையில், அந்த நோயாளியின் காலில் இருந்து ஒரு சிரையையும், நெஞ்சுப் பகுதியிலிருந்து ஒரு தமனியையும் எடுத்து பெருந்தமனியிலிருந்து செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளைத் தாண்டி இதயத்துக்கு ரத்த குழாய் செல்லும் இடங்களுக்கு தனித் தனியாக பதியன்போல பொருத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமுடன் புதன்கிழமை வீடு திரும்பினாா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முதலாக மேற்கண்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சையை திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொண்டுள்ளோம்.

இதய நோய் தொடா்பாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நாள்தோரும் 10 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனா். இதில் 7 பேருக்கு ஆஞ்சியோ பரிசோதனையும், மூவருக்கு ஸ்டன்ட் வைப்பதும் நடந்து வருகிறது. கடந்த 2022 அக்டோபரில் இதயத் தமனிகளில் இரு அடைப்புகள் இருந்த நபருக்கு இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் காத்திருக்கும் 4 நோயாளிகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளது என மருத்துவமனை முதன்மையா் எஸ். குமரவேல் தெரிவித்தாா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க