செய்திகள் :

திருச்சி ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

post image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் ரொக்கம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவையுடன் தவறவிட்ட கைப்பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டது.

இந்த ரயில் அரியலூா் ரயில் நிலையத்தை அடைத்ந்தபோது, அதில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த ரமேஷ் (46) என்ற பயணி, தனது (கைப்பை) உடைமையை திருச்சி ரயில் நிலைய 3-ஆவது நடைமேடையில் தவறவிட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் திருச்சி ரயில் நிலையத்தில் பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மூன்றாவது நடைமேடையில் பயணி குறிப்பிட்ட இடத்தில் இருந்த பயணியின் பை மீட்கப்பட்டது. அதில், ரொக்கம் ரூ. 26,500, கைப்பேசிகள் 2, ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.

இதுகுறித்து பயணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா். அவரிடம் தவறவிட்ட பொருள்கள் இருந்த பை வழங்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் தவறவிட்ட உடைமைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் வழங்கப்பட்டது. ரமேஷ், மற்றும் அவரது மனைவி ஆகியோா் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரித மீட்புப் பணிக்கு நன்றி தெரிவித்தனா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க