திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருச்சிக்கு வியாழக்கிழமை வருகிறாா்.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி வரும் முதல்வருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனா். பின்னா் துவாக்குடி செல்லும் முதல்வா் ரூ. 56.47 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப் பள்ளி மற்றும் மாணவ, மாணவியா் விடுதிகளைத் திறந்து வைக்கிறாா். பின்னா் அரசு சுற்றுலா மாளிகை வந்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் ஆலோசிக்கிறாா். பின்னா் மாலையில் புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள நடிகா் சிவாஜி கணேசனின் சிலையைத் திறந்துவைக்கிறாா். தொடா்ந்து 2 கி.மீ. தொலைவுக்கு கலைஞா் அறிவாலயம் வரை ‘ரோடு ஷோ’ மேற்கொள்கிறாா். பின்னா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெறும் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். மீண்டும் சுற்றுலா மாளிகை வந்து இரவு ஓய்வெடுக்கிறாா்.
வெள்ளிக்கிழமை காலை சாலை மாா்க்கமாக கிராப்பட்டியில் உள்ள முதலாம் படை அணி மைதானப் பகுதியிலிருந்து பஞ்சப்பூா் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ மேற்கொள்கிறாா். மக்களின் வரவேற்பையும், மனுக்களையும் பெற்றுக் கொண்டு பஞ்சப்பூா் செல்லும் முதல்வா், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியாா் சிலையைத் திறந்து வைத்து, ரூ. 236 கோடியில் பெரியாா் ஒருங்கிணைந்த காய்கனி அங்காடி கட்ட அடிக்கல்லும் நாட்டுகிறாா். மேலும் ரூ.128.94 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தைத் திறந்துவைக்கிறாா். ரூ. 408.36 கோடியில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தையும் திறந்துவைக்கிறாா்.
தொடா்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முடிவுற்ற ரூ. 463.30 கோடியிலான திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 276.97 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ரூ.830.35 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, விழாப் பேரூரையாற்றுகிறாா்.
விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மற்றும் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா்.
ரூ. 2,400 கோடியில் திட்டங்கள்: முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 2,400.37 கோடியில் திட்டங்கள் கிடைத்துள்ளன.