செய்திகள் :

திருச்செந்தூர்: தூய்மை பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழப்பு - வேலைக்கு வந்த முதல் நாளில் பரிதாபம்

post image

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுடலைமணி, திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டு முதல் நாளாக நேற்று (08.06.2025) வேலைக்கு வந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (09.06.2025) வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

உயிரிழந்த தூய்மை பணியாளர் சுடலைமணி

இதனை முன்னிட்டு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நடந்து வருவதில் இடையூறு ஏற்படாமல் இருக்க, திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் சுற்றி உள்ள இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து  எந்தெந்த பகுதிகளில் கழிவு நீர் வெளியே வருகிறதோ அதனை சரி செய்வதற்காக தூய்மைப் பணியாளர்கள் அதனை உடனடியாக திறந்து சரி செய்து அதனை சீரமைக்கும் முயற்சியில் நேற்று  ஈடுபட்டனர்.  

இந்த நிலையில், அரசு மருத்துவமனையின் பின்புறம் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுடலைமணி, அங்கு சென்று அவரது குழுவினருடன் சாக்கடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உயிரிழந்த தூய்மை பணியாளர் சுடலைமணி

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணியின் உடலை மீட்டனர். ஆனால், அவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. வேலைக்கு வந்த முதல் நாளிலேயே மாற்றுத்திறனாளி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.நெல்லை மாவட்டம் வீரவநல... மேலும் பார்க்க

`இந்த அங்கிள்தான்’ - அரசு சேவை இல்லத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; காவலாளி சிக்கியது எப்படி?

சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 128 மாணவிகள், 5 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த சேவை இல்லத... மேலும் பார்க்க

நெல்லை: ``பிரிவினை, வன்முறையை தூண்டும் வலைதள பதிவுகளை போட்டால்..'' - எச்சரிக்கும் போலீஸ் கமிஷனர்

நெல்லையில் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக ஊடகங்கள் வாயிலாக பிரிவினையைத் தூண்டி, பொதுமக்களிடையே தவறான புரிதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நபர்களை போலீஸார் கண்டுபிடித்து களை எடுத்து வருகின்றனர். க... மேலும் பார்க்க

மேகாலாயா தம்பதி மிஸ்ஸிங் வழக்கு: தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கொன்ற மனைவி; சிக்க வைத்த கைடு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது தேனிலவை கொண்டாட மேகாலயா மாநிலத்திற்கு சென்றனர். அங்கு சென்ற இடத... மேலும் பார்க்க