செய்திகள் :

நெல்லை: ``பிரிவினை, வன்முறையை தூண்டும் வலைதள பதிவுகளை போட்டால்..'' - எச்சரிக்கும் போலீஸ் கமிஷனர்

post image

நெல்லையில் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக ஊடகங்கள் வாயிலாக பிரிவினையைத் தூண்டி, பொதுமக்களிடையே தவறான புரிதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நபர்களை போலீஸார் கண்டுபிடித்து களை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பயங்கர ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரச்னைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களின் சமூக வலைதள கணக்குகள் மட்டுமின்றி, அவர்களை பின்தொடரும் பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி

சட்டத்திற்கு புறம்பான பதிவுகளை யாரேனும் பதிவிட்டிருந்தாலோ அல்லது பகிர்ந்திருந்தாலோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட போலீஸார் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக வலைதளங்களை கையாளுவது குறித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸாரின் சமூக ஊடகப்பிரிவு, சட்டம் ஒழுங்கினைப் பாதிக்கும் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2024-ம் ஆண்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 36 பேர் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு தற்போது வரை 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லாத பல இளைஞர்கள், அதை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குற்றவழக்கு நிலுவையில் உள்ளவர்களை புகழ்ந்து தள்ளும் வீடியோக்களும், பிரிவினையை தூண்டும் பாடல்களுக்கு நடனமாடும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

இது குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜியும் (பொறுப்பு), மாநகர கமிஷனருமான சந்தோஷ் ஹாதிமணி கூறுகையில், “இளைஞர்கள் சமூக வலைதளங்களை கவனத்துடன் கையாள வேண்டும். பிரிவினையை தூண்டும் வகையிலான வீடியோக்கள் பதிவிடும் போக்கை தடுக்க ஊடக்கப்பிரிவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்ச்சை வீடியோக்களை பதிவிடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.நெல்லை மாவட்டம் வீரவநல... மேலும் பார்க்க

`இந்த அங்கிள்தான்’ - அரசு சேவை இல்லத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; காவலாளி சிக்கியது எப்படி?

சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 128 மாணவிகள், 5 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த சேவை இல்லத... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தூய்மை பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழப்பு - வேலைக்கு வந்த முதல் நாளில் பரிதாபம்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுடலைமணி, திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் ஏற்கெ... மேலும் பார்க்க

மேகாலாயா தம்பதி மிஸ்ஸிங் வழக்கு: தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கொன்ற மனைவி; சிக்க வைத்த கைடு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது தேனிலவை கொண்டாட மேகாலயா மாநிலத்திற்கு சென்றனர். அங்கு சென்ற இடத... மேலும் பார்க்க