செய்திகள் :

திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலிலிருந்து திருவிழா கொடிப்பட்டம் புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்ததும் காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. காப்பு கட்டிய சிவக்குமாா் வல்லவராயா் அதை ஏற்றிவைத்தாா். பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன், விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா், திருவிழா பிரிவு ஆறுமுகராஜ், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை, மாலைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவாக பத்தாம் திருநாளில் (ஆக. 11) காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன், மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

நூலக மனிதா்கள் அமைப்பின் சாா்பில், பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, இலக்கிய விழா என இருபெரும் விழா தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்றது.நூலக மனி... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ: இளைஞா் கைது

மேலஆத்தூரில் அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாக இளைஞரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் முகைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் மகான் தைக்கா ஷேக் முகம்மது சாலிஹ் 124ஆவது கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்ற விழாவில், நாள்தோறும் காலை... மேலும் பார்க்க

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

மேலஆத்தூரில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியா் சடலம்

கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் இறந்த நிலையில் இருந்த ஊழியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.தூத்துக்குடி மாவட்டம் மேலூா், கிருஷ்ணராஜபுரம் 4 ஆவது தெருவை சோ்ந்தவா் ஜேசுராஜ் மகன் அந்தோணி மிக்கேல் ... மேலும் பார்க்க