செய்திகள் :

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் மக்களை சந்தித்த கனிமொழி எம்.பி.!

post image

திருச்செந்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி எம்.பி. இண்டி கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாவது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து அவா் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

இந்நிலையில், திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் செய்த அவா், நல்லூா், அம்மன்புரம், வள்ளிவிளை, பூச்சிக்காடு, காயாமொழி, நடுநாலுமூலைக்கிணறு, கீழ நாலுமூலைக்கிணறு, நா. முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டேவிட் செல்வின், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் பிரம்மசக்தி, நகா்மன்ற துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, இளைஞரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளா் எஸ்.ஜே. ஜெகன், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் சாரதா பொன்இசக்கி, காயாமொழி முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க