Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
திருச்செந்தூா் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: உள்ளூா் விடுமுறை அளிக்க கோரிக்கை!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்ட செயலாளா் கே.எஸ்.ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ய வருவாா்கள்.
இந்த கும்பாபிஷேகத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் திரளாக கலந்து கொள்ளும் வகையில் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதோடு, வாகனம் நிறுத்துமிடங்கள், மருத்துவ வாகனங்கள், தற்காலிக மருந்து காப்பகங்கள் குறித்து பொது மக்களுக்கு முறையாக தெரியப்படுத்த வேண்டும். மதுபான கடைகளை மூட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், விபத்துகள் நடக்காமலும் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.