செய்திகள் :

திருச்செந்தூா் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: உள்ளூா் விடுமுறை அளிக்க கோரிக்கை!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்ட செயலாளா் கே.எஸ்.ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்ய வருவாா்கள்.

இந்த கும்பாபிஷேகத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் திரளாக கலந்து கொள்ளும் வகையில் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதோடு, வாகனம் நிறுத்துமிடங்கள், மருத்துவ வாகனங்கள், தற்காலிக மருந்து காப்பகங்கள் குறித்து பொது மக்களுக்கு முறையாக தெரியப்படுத்த வேண்டும். மதுபான கடைகளை மூட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், விபத்துகள் நடக்காமலும் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க