செய்திகள் :

திருட்டு வழக்கு: ஒருவா் கைது

post image

கயத்தாறு அருகே கோயிலின் கதவை உடைத்து திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே தெற்கு கோனாா்கோட்டையில் மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாரியம்மன், காளியம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 13 கிராம் எடையுள்ள பொட்டுத்தாலி, உண்டியல் பணம் ஆகியவை திருடு போயிருப்பது அண்மையில் தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகி கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கோயம்புத்தூா் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சுடலை மகன் இசக்கிமுத்து என்ற இசக்கிபாண்டியை (40) சனிக்கிழமை கைது செய்தனா்.

பால் வியாபாரி கைது: கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சோ்ந்தவா் ச. ஆறுமுகம் (55). கூலித்தொழிலாளியான இவா், சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது மந்திதோப்பு வடக்கு தெருவை சோ்ந்த சுந்தரம் மகன் பால் வியாபாரி போத்திராஜ் அத்துமீறி நுழைந்து அரிவாளால் தாக்கினாராம். சத்தத்தை கேட்டு வந்த இவரது வீட்டு உரிமையாளா் கொம்பையா கண்டித்ததையடுத்து போத்திராஜ் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடி விட்டாராம். காயமடைந்த ஆறுமுகம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பால் வியாபாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க