செய்திகள் :

திருப்பதி லட்டு விவகாரம்: பல்வேறு முறைகேடுகள் அம்பலம்! திண்டுக்கல் நிறுவன உரிமையாளர் கைது!

post image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன.

திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதையும் படிக்க : தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

முந்தைய ஆட்சியில் திருப்பதி ‘லட்டு’ தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நயயுடு எழுப்பிய குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இக்குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ இயக்குநரின் மேற்பாா்வையில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

போலி ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டிருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், தனியாா் பால் நிறுவனங்களுக்குத் தொடா்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூா்வா சாவ்டா, ராஜசேகரன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில், ராஜசேகரன் என்பவர் திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையின்போது நெய் விநியோகித்ததில் பெரும் முறைகேட்டில் தனியார் பால் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் பால் நிறுவனத்தின் ஆவணங்களை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து வைஸ்ணவி என்ற நிறுவனம் நெய் விநியோகிக்க ஒப்பந்தத்தை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரகண்ட் மாநில ரூர்க்கியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படுவதாகவும் வைஸ்ணவி நிறுவனம் போலி ஆவணத்தை தயாரித்துள்ளது.

இதனடிப்படையில், மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த 4 பேரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளை கடந்து... மேலும் பார்க்க

தெப்போற்சவம்: ஆண்டாளுடன் ஸ்ரீ கிருஷ்ணா் உலா

தெப்பத்தில் வலம் வந்த ஆண்டாள் சமேத கிருஷ்ணா். திருப்பதி, பிப்.9: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆண்டாள் சமேத ஸ்ரீகிருஷ்ணா் தெப்பத்தில் உலா வ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிந... மேலும் பார்க்க

கோவிந்தராஜ சுவாமி கோயில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பாா்த்தசாரதி சுவாமி உலா

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பாா்த்தசாரதி சுவாமி உலா வந்தாா். திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக... மேலும் பார்க்க

கோவிந்தராஜ சுவாமி கோயில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணா் உலா

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் தெப்பத்தில் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் உலா வந்தாா். திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிப். 19-இல் கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம்

திருப்பதி சேஷாசல மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப். 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 18 ஆம் தேதி அங்குராா்பணம் நடைபெறும். ப... மேலும் பார்க்க