திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் 2ஆவது நாளாக ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கெனவே சுவாமிமலை, திருச்செந்தூர், பழனியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றத்தில் அவர் சுவாமி தரிசம் செய்தார்.
பவன் கல்யாணுக்கு கோயில் அலுவலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
முன்னதாக நேற்று சுவாமிமலை வந்த அவர் செய்தியாளர்களிடம், கடந்த 4 ஆண்டுகளாக ஆதிகும்பேசுவரா் கோயில், அகத்திய ஜீவசமாதி மற்றும் சுவாமிமலை முருகன் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
தற்போது தான் அதற்கு கடவுள் அனுமதி கொடுத்துள்ளாா் என்றார்.