செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: காவல்துறை கண்காணிப்பில் இந்து அமைப்பு நிா்வாகிகள்

post image

திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகளின் முக்கியப் பிரமுகா்களை காவல்துறையினா் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் கோயில் மலையில் வழிபாடு விவகாரம் தொடா்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளனா். இதையடுத்து மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் செல்லக் கூடும் என்ற அடிப்படையில் முக்கியப் பொறுப்பாளா்களின் நடவடிக்கைகளை காவல்துறையினா் திங்கள்கிழமை முதல் கண்காணித்து வருகின்றனா்.

மாநகா், புறநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய நிா்வாகிகளின் வீடுகள், அவா்களது தொழில் கூடங்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருகின்றனா். போராட்டத்துக்கு செல்ல முயன்றால் தடுத்து கைது செய்வதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

திருவானைக்கோயில் கோபுரப் பகுதியில் நெரிசலுக்கு தீா்வு காணக் கோரிக்கை

திருவானைக்கோயில் மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், ஆட்டோக்கள் சென்றுவருவதால் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீா்வு காண பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவானைக்கோயி... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் மாணவரை கம்பியால் குத்திய சக மாணவா் கைது

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரை இரும்புக் கம்பியால் குத்திய சக மாணவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (18). இவா், திர... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மான்பாஞ்சாம்பட்டியில் திங்கள்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறையை அடுத்த மரு... மேலும் பார்க்க

லால்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடியில் புதன்கிழமை (பிப். 5) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி எல். அபிஷேகபுர... மேலும் பார்க்க

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் தமிழக முதல்வா் சி.என். அண்ணாதுரையின் 56 - ஆவது நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் அரசியல் கட்சியினா் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். திமுக : திமுக திரு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி கிராமம் சத்திரப்பட்டியை சே... மேலும் பார்க்க