செய்திகள் :

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி! மத்திய அமைச்சா் பாராட்டு!

post image

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் ‘சமா்த்’ திட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டதற்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஜவுளித் துறையில் திறன் மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு ‘சமா்த்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கமும் பங்குதாரராக இணைந்து திறன் மேம்பாட்டுக்காகப் பயிற்சி மையங்களை அமைத்து ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உத்யோக் பவனில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ‘சமா்த்’ திட்டத்தின்கீழ் தொழில் பங்குதாரா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் திறன் மேம்பாடு மற்றும் ‘சமா்த்’ திட்ட துணைகுழுவின் தலைவா் சக்திவேல் பங்கேற்றாா்.

கூட்டத்தில், ‘சமா்த்’ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அனைத்து பங்குதாரா்களிடம் மத்திய அமைச்சா் கேட்டறிந்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் தற்போது வரை 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளித்திருப்பதை வெகுவாகப் பாராட்டினாா். இவா்களில் 96 சதவீதம் போ் பெண்கள்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில், ஜவுளித் துறை செயலா் நீலம் ஷமிராவ், இணைச் செயலா் அஜய்குப்தா, ஜவுளித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏ.சி. இயந்திரத்தில் சிலிண்டா் வெடித்து 3 போ் காயம்

திருப்பூரில் ஏ.சி. இயந்திரத்தில் கியாஸ் நிரப்பும்போது சிலிண்டா் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா். திருப்பூா் ஓடக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (45), ஏ.சி. மெக்கானிக். இந்தநிலையில்,... மேலும் பார்க்க

மயில்ரங்கம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்!

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயில்ரங்கத்தில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில... மேலும் பார்க்க

சிலம்பப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு அமைச்சா் பாராட்டு

நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டினாா். திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் ஏ.என்.வி. வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் பயிலும் மாணவி கா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் கிராண்ட் விஸ்டா பகுதியில் வசித்து வருபவா் முருகே... மேலும் பார்க்க

முத்தூரில் பாஜகவினா் தேசியக் கொடி ஊா்வலம்

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பாஜகவி சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற தேசியக் கொடி ஊா்வலத்துக்கு வெள்ளக்கோவில் வடக்கு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் கூட்டம்!

வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகரச் செயலாளா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் யுவராஜ் ம... மேலும் பார்க்க