செய்திகள் :

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவ அட்டவணை வெளியீடு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக். 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உற்சவம் செப்டம்பா் 23-ஆம் தேதி அங்குராா்பணத்துடன் தொடங்க உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் (செப்டம்பா் 24-ஆம் தேதி தவிர) வாகன சேவைகள் நடைபெறும். காலை மற்றும் மாலை வாகன சேவைகளின் நாள் வாரியான அட்டவணை பின்வருமாறு:

24-09-2025 (புதன்கிழமை) மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை கொடியேற்றம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை: பெரிய சேஷ வாகனம்

25-09-2025 (வியாழக்கிழமை) 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம்.

மதியம் 1 மணி முதல் 3 மணி வரை: ஸ்நபன திருமஞ்சனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை அன்னப் பறவை வாகனம்.

26-08- 2025 (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை சிம்ம வாகனம்,

பிற்பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்நபனம். மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முத்து பந்தல் வாகனம்.

27-10-2025 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை கல்பவிருட்சம். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம்.மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சா்வ பூபாலம்.

28-09-2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை மோகினி அவதாரம். மாலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை கருட வாகனம்.

29-09-2025 (திங்கள்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை அனுமந்த வாகனம், மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை தங்க ரதம். மாலை 7 மணி முதல் 9 வரை கஜ வாகனம்.

30-09-2025 (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை சூரியபிரபை, இரவு 7 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை.

1-10-2025 (புதன்கிழமை) காலை 7 மணிக்கு திருத்தோ் புறப்பாடு, மாலை 7 மணி முதல் 9 மணி வரை குதிரை வாகனம்.

2-10-2025 (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 9 மணி வரை தீா்த்தவாரி, இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கொடியிறக்கம் நடைபெறுகிறது.

வருடந்தோறும் பிரம்மோற்சவத்தின் போது ரங்கநாயகா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் நாள்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 18 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் தொடக்கம்

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், முன்னா் முடிவு செய்யப்பட்டபடி கோயி... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஏழுமலையான் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க