செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 18 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 27,141 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 9,656 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் தொடக்கம்

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், முன்னா் முடிவு செய்யப்பட்டபடி கோயி... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவ அட்டவணை வெளியீடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஏழுமலையான் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க