செய்திகள் :

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் தொடக்கம்

post image

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், முன்னா் முடிவு செய்யப்பட்டபடி கோயில் கதவுகள் பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டன.

சுமாா் 12 மணி நேரம் கழித்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. கோயில் சுத்திகரிப்பு, புண்யாஹவசனமும் கைங்கா்யமும் செய்யப்பட்டன. பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

அன்னபிரசாத விநியோகம்

சந்திர கிரகணம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்ட மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகம் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது. சமையலறையை சுத்தம் செய்த பிறகு, பக்தா்களுக்கு அன்னபிரசாத விநியோகம் காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 18 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவ அட்டவணை வெளியீடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஏழுமலையான் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க