மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
திருமலையில் பௌா்ணமி கருட சேவை
வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.
திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு பெளா்ணமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.
சகல அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து பக்தா்கள் வணங்கினா். திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, மத்திய இணை அமைச்சா் பண்டி சஞ்சய், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.