செய்திகள் :

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

post image

வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு பெளா்ணமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.

சகல அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து பக்தா்கள் வணங்கினா். திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, மத்திய இணை அமைச்சா் பண்டி சஞ்சய், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திரு... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம் குறித்த மறுஆய்வு

வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறவிருக்கும் வருடாந்திர பிரம்மோற்சவங்களைக் கருத்தில் கொண்டு, திட்டங்களைத் தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளை... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.99 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வார நாள்களிலும் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.66 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: நேரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு செயல் அதிகாரி சியாமளா ராவ் அறிவு... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறை... மேலும் பார்க்க