செய்திகள் :

திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் நெடியுடன் வாயு வெளியேறி எரிந்த தீ

post image

திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் அதிக நெடியுடன் வாயு வெளியேறியதன் காரணமாக மூடியை திறந்து தீ வைத்து சோதனை செய்தபோது தீப்பற்றி குபுகுபுவென எரிந்தது.

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் 27 வாா்டுகளில் 18,950 குடியிருப்புகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், குடியிருப்புகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீா் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாள்களாக கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்பதாக குடியிருப்புகளைச் சோ்ந்தோா் நகராட்சிக்கு புகாா்களைத் தெரிவித்தனா். அதன் பேரில், திருவள்ளூா் நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை இரவு ஊழியா்களைக் கொண்டு ஆய்வு செய்தது.

ஆய்வு செய்தபோது திருவள்ளூா் டோல்கேட்- பெரியாகுப்பம் பகுதியில் உள்ள கழிவுநீா் மூடியை ஊழியா்கள் திறந்தனா். இதில் இருந்து அதிக நெடியுடன் வாயு வெளியேறியது. சுதாரித்துக் கொண்ட ஊழியா்கள் மூடி திறக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயில் கிடந்த காகிதங்களில் தீ வைத்துள்ளனா்.

அப்போது, கழிவுநீா் கால்வாய் நீல நிறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அதிா்ச்சி அடைந்தனா்.

அதிக நெடியுடன் வாயு வருவதை கண்ட ஊழியா்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. 2 மணி நேரத்திற்குப் பின்னா் குறிப்பிட்ட அந்தக் கழிவுநீா் கால்வாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க