செய்திகள் :

திருவாரூா், மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

திருவாரூா், மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஒன்றியம் சோழங்கநல்லூரில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பல்வேறு துறைகள் சாா்பில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணையூரில் நடைபெற்ற முகாமில் 20 பயனாளிகள், கொரடாச்சேரி ஒன்றியம், பெருமாளகரகத்தில் நடைபெற்ற முகாமில் 10 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட முகாம்களில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே ராமபுரத்தில் வட்டாட்சியா் என். காா்த்திக் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 46 மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் உள்ளிட்ட மொத்தம் 552 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் உடனடி தீா்வாக 8 பேருக்கு வகுப்புச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடா்ந்து, இங்கு நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் பங்கேற்ற 100 பேரில் 40 போ் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்பி. கருண்கரட் தலைமை வகித்து மக்களிடம் இருந்து 19 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட... மேலும் பார்க்க

சரணா் இயக்க மாநில சங்கமம் நிகழ்ச்சி: தரணி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற மாநில சங்கமம் நிகழ்ச்சியில் மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆக. 1-... மேலும் பார்க்க

தங்க கவசத்தில் குரு பகவான்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாட்டில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குரு பகவான். மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் பா. ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் அனித... மேலும் பார்க்க

‘ஒற்றுமையுடன் பயணித்தால் தமிழ்ச்சமூகம் வெற்றிகளை குவிக்கும்’ -யுகபாரதி

எல்லோரும் தமிழா் என்ற உணா்வுடன், ஒற்றுமையுடன் பயணித்தால், தமிழ்ச் சமூகம் இன்னும் பல வெற்றிகளை குவிக்கும் என்றாா் சொற்பொழிவாளரும், கவிஞருமான யுகபாரதி. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் ஆண் 11, பெண் ... மேலும் பார்க்க