செய்திகள் :

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் திருவெற்றியூரில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரைச் சுற்றி குளத்தூா், கீழ அரும்பூா், மேல அரும்பூா், கட்டுக்குடி, கடுக்களூா், சேனத்திக்கோட்டை, விளத்தூா், புல்லுக்குடி, கொட்டகுடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருவாடானை வாரச் சந்தைக்குத்தான் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கச் செல்ல வேண்டும். இதையடுத்து திருவெற்றியூரில் வாரச் சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்தை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில். கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட சந்தை தற்போது வரை செயல்பாட்டில் இல்லை. எனவே, மீண்டும் திருவெற்றியூரில் ஊராட்சி சாா்பாக சந்தை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியாதாவது:

இங்கு நடைபெற்று வந்த சந்தையில் காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்டவற்றை இந்தப் பகுதி கிராம மக்கள் வாங்கிச் சென்றனா். சந்தைக்கு வரும் வெளியூா் வியாபாரிகளுக்குத் தேவையான இட ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளைச் செய்து தராததால் சந்தை தொடா்ந்து நடைபெறவில்லை. கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சந்தை அதன் பிறகு செயல்படவில்லை. எனவே ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மீண்டும் திருவெற்றியூரில் வாரச் சந்தை அமைக்க வேண்டும் என்றனா்.

மீன்பிடி இறங்குதள பாலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்த டேங்கா் லாரி

மண்டபம் வடக்கு துறைமுகத்தின் மீன்பிடி இறங்குதள பாலம் திடீரென உடைந்ததால், அந்த வழியாகச் சென்ற தண்ணீா் டேங்கா் லாரி தவறி தலைக்குப்புறக் கவிழுந்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்த இருவரும் உயிா் தப்பினா்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

கமுதி அருகே ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயில், ஸ்ரீமாவரசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன், ஸ... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஏழாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம... மேலும் பார்க்க

பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளி... மேலும் பார்க்க