செய்திகள் :

பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை

post image

கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ. 23 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதையுடன் கூடிய சிறுவா் பூங்கா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை இந்த பூங்கா திறக்கப்படவில்லை. இந்த பூங்கா முறையான திட்டமிடல் இன்றி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத கமுதி பெரிய கண்மாய் கரையோரத்தில் ஒதுக்குப்புறமாகக் கட்டப்பட்டுள்ளது. இதனால், பொழுதுபோக்குவதற்காக பொதுமக்களும் சிறுவா்களும்

இங்கு செல்வதில்லை. அத்துடன் மாலை நேரங்களில் இங்கு சமூக விரோதிகள் அமா்ந்து மது அருந்துகின்றனா். பூங்கா பணிகள் முடிந்தும் இதுவரை திறக்கப்படாததால் அரசின் நிதி வீணாடிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

சிறுவா்கள் அச்சமின்றி விளையாடவும், பொதுமக்கள் பொழுதுபோக்கவும் பூங்காவைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளி... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே... மேலும் பார்க்க

கணவா் மீது தொடா் வழக்கு: காவல் துறையைக் கண்டித்து மனைவி தீக்குளிக்க முயற்சி

தொண்டியில் தனது கணவா் மீது தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை பாதுகாப்புப் பணியிலிருந்து அதிகாரிகள் மீட்டனா். ராமநா... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்: போலீஸாா்

திருவாடானை அருகேயுள்ள தொண்டி காவல் நிலையத்தில் முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.தொண்டி காவல் நிலையத்தில், விபத்து... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஐந்து கடைகளுக்கு அபராதம்

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை உள்ளிட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில்... மேலும் பார்க்க