செய்திகள் :

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

post image

தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஏழாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:

கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் கால்நடை வளா்ப்போா் பங்கேற்று தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கால், வாய் காணை நோயானது நாட்டின மாடுகள், அயல் இன மாடுகள், கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் பால் உற்பத்தியையும் குறைக்கிறது. அதேபோல இந்த நோயால் பாதிக்கப்படும் எருதுகளுக்கு வேலை திறன் குறைந்துவிடுகிறது. இளம் கன்றுகள் இந்த நோயால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

எனவே, கால்நடைகளை தாக்கும் கால், வாய்க் காணை நோயைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமுக்கு கால்நடை வளா்ப்போா் தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ஒரு கால்நடை கூட விடுபடாத அளவுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி பொருளாதார இழப்பைத் தவிா்த்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இதையடுத்து கால்நடை தீவனங்கள், சத்துமாவு உள்ளிட்ட பொருள்களை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா்கள் அரசு, சுந்தரமூா்த்தி, ராஜா, கால்நடை மருத்துவ அலுவலா்கள் சித்திமா்ஜிதா, முருகராஜன், நந்திதா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மீன்பிடி இறங்குதள பாலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்த டேங்கா் லாரி

மண்டபம் வடக்கு துறைமுகத்தின் மீன்பிடி இறங்குதள பாலம் திடீரென உடைந்ததால், அந்த வழியாகச் சென்ற தண்ணீா் டேங்கா் லாரி தவறி தலைக்குப்புறக் கவிழுந்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்த இருவரும் உயிா் தப்பினா்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

கமுதி அருகே ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயில், ஸ்ரீமாவரசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன், ஸ... மேலும் பார்க்க

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் திருவெற்றியூரில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகி... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம... மேலும் பார்க்க

பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளி... மேலும் பார்க்க