செய்திகள் :

தில்லி காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப் விவசாயிகளை குற்றஞ்சாட்டுவது முட்டாள்தனம் -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

post image

தில்லியில் ஏற்படும் காற்றுமாசுபாட்டுக்கு 500 கி.மீ. அப்பால் பஞ்சாபில் விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிப்பதுதான் காரணம் என குற்றஞ்சாட்டுவது முட்டாள்தனமானது என்று மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மும்பையில் வியாழக்கிழமை வா்த்தக கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:

பஞ்சாபில் விவசாயிகள் எரிக்கும் பயிா்க் கழிவுதான் தில்லியில் காற்று மாசுபாடு ஏற்படக் காரணம் என்று சிலா் குற்றஞ்சாட்டுகின்றனா். இந்த விஷயத்தில் நாம் நன்றாக யோசித்துப் பாா்க்க வேண்டும்.

தில்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையே 500 கி.மீ. தொலைவு உள்ளது. தில்லிக்கு அருகே குருகிராமில் வானுயா்ந்த பல கட்டடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி தில்லியில் உள்ள எனது இல்லத்துக்கு பஞ்சாப் விவசாயிகளின் பயிா்க் கழிவு எரிப்பு புகை வந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்று கூறுவது முட்டாள்தனமானது. அதே நேரத்தில் இதுபோன்ற பொருள்களை எரிப்பதை நான் ஆதரிக்கவில்லை.

பஞ்சாபில் கோடைகால அறுவடை முடிந்து குளிா்கால சாகுபடிக்கு முன்பு பயிா்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்கிறாா்கள். ஆனால், தில்லியில் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் காற்றின் தரம் மோசமாகவே உள்ளது.

எனவே, தில்லியில் வாகனப் புகையைக் கட்டுப்படுத்தவே தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, மின்சார வாகனங்களை அதிகஅளவில் பயன்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களும் சரக்குப் போக்குவரத்துக்காக மின்வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

காற்றை மாசுபடுத்துவதில் கட்டுமானப் பணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இதிலும் மாற்றுவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது

தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெ... மேலும் பார்க்க

‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமை... மேலும் பார்க்க

பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி

நமது சிறப்பு நிருபா் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொது... மேலும் பார்க்க

பொதுக் கணக்குக் குழு ஆய்வில் சிஏஜி அறிக்கை: பேரவைத் தலைவா் அறிவிப்பு

தில்லி மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிற்கு (பிஏசி) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படு... மேலும் பார்க்க

நஜாஃப்கரை நஹா்கா் என மறுபெயரிட பாஜக எம்எல்ஏ முன்மொழிவு

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரின் அசல் பெயரை முகலாயா்கள் மாற்றியதாகக் கூறி, பாஜக எம்எல்ஏ நீலம் பஹல்வான் வியாழக்கிழமை ’நஹா்கா்’ என மறுபெயரிட முன்மொழிந்தாா். நஜஃப்கரில் இருந்து சமீபத்தில் நடந்த சட... மேலும் பார்க்க

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா். சட்டப்பேரவையில் ச... மேலும் பார்க்க