செய்திகள் :

தில்லி நேரு பல்கலை. அருகில் வள்ளுவா் சிலை - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

post image

புது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கு அருகில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பதிலுரை வழங்கி வெளியிட்ட அறிவிப்புகள்:

கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய்க்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும். தமிழறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள், எல்லைக் காவலா்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அது, ரூ.7,500-ஆக உயா்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.3.90 கோடி தொடா் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவோரின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயா்த்தப்படும்.

தமிழ் வளா்ச்சிக் கழகம் தொய்வின்றி செயல்பட ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும். தமிழறிஞா்கள் 10 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். இதற்காக ரூ.1.01 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாா் பிறந்த இடமான சென்னை தண்டலம் கிராமத்தில் அவருக்கு ரூ.1 கோடியில் நினைவரங்கமும், மாா்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அவரது பெயரில் உள்ள நூலகம் மேம்படுத்தப்படும்.

வள்ளுவருக்குச் சிலை: புது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்கு கலையரங்கம் அருகில் ரூ.50 லட்சத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும்.

மொழிபெயா்ப்பாளா் க.ரா.ஜமதக்னிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.25 லட்சத்தில் நினைவுத் தூணும், சங்கப் புலவா் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் ரூ.50 லட்சத்தில் சிலையும் அமைக்கப்படும்.

கவிக்கோ அப்துல் ரகுமான், அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா ஆகியோரது பிறந்த நாள்கள் மாவட்ட அளவில் அரசு விழாக்களாக கொண்டாடப்படும்.

உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை படிப்பு பயிலும் மாணவா்கள் 15 பேருக்கு தோ்வின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க