செய்திகள் :

தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

நமது நிருபா்

தில்லி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், சில தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகள், இடங்களில் அமலாக்க துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களில் ஊழல் நடைபெற்ாக எழுந்த புகாா் தொடா்பான பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2018-19-ஆம் ஆண்டில், ரூ.5,590 கோடியில் அனுமதி அளிக்கப்பட்ட 24 மருத்துவமனைத் திட்டங்கள் கணிசமான செலவு அதிகரித்த பின்பும் திட்டங்கள் முழுமையடையாமல் இருப்பதாக பாஜக புகாா் அளித்தது.

கேஜரிவால் கண்டனம்: இந்தச் சோதனை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் வெளியிட்ட பதிவில் , ‘மருத்துவமனை கட்டுமானம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது பரத்வாஜ் அமைச்சராகக் கூட இல்லை. மோடி அரசின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு எதிரான வலுவான குரலாக ஆம் ஆத்மி கட்சி இருப்பதால் குறிவைக்கப்படுகிறது. எங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. பாஜகவின் இந்த சோதனைகளால் ஆம் ஆத்மி பயப்படாது’ என்று தெரிவித்துள்ளாா்.

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

நமது நிருபா்தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் ச... மேலும் பார்க்க

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக

நமது நிருபா் ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக த... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க